கடந்த மாதம் மதுரையில் உள்ள டாக்டர் கோ.நம்மாழ்வார் N.R.S.L.T. அறக்கட்டளைச் சென்றிருந்தேன். அங்கு அதன் செயலாளர் கரிகாலனை சந்தித்தேன். துபாய் நாட்டுக்கு வியாபார நிமித்தம் சென்று வருபவர் ஆவர். கரிகாலன் சொன்னார் வெளிநாட்ட வர்கள் பாட்டிலில் அடைத்து வரும் இளநீரை, எவ்வளவு சுவையாக இருந்தாலும் விரும்பிக் குடிக்க விரும்புவதில்லை. இங்கிருந்து சீவி சிறியதாக வரும் இளநீரை, சிறு ஓட்டை போட்டு, குளிர்ச்சியாக ஸ்டிரா போட்டு குடிப்பார்கள். ரூ.250 (இந்திய ரூபாய்) விலை வரை துபாயில் போகிறது. அந்த வகையில் இளநீரை 4 பக்கமும் சீவி சிறியதாக மாற்றித் தரும் மெஷின் எங்கு கிடைக்கும் என கேட்டார்.
அதன் பின் கொச்சி சென்றிருந்தேன். பஸ் நிலையத்தில் "தென்னை வளர்ச்சி வாரியம்'' Coconut Development Board உடைய விற்பனை மையத்தில் வாங்கிக் குடித்தேன். மரத்தில் இருந்து வெட்டிக் குடித்ததை போல் மிக சுவையாக இருந்தது. விசாரணை செய்தேன். கேரளாவில் இருந்து ஏராளமான கோடி ரூபாய் விலையுள்ள இளநீர் ஏற்றுமதி ஆவதாக தெரிவித்தார். தாய்லாந்து நாட்டில் இருந்து ஏராளமான இளநீர் ஏற்றுமதி ஆவதை அறிந்தேன். இளநீர் குலைகளை மொத்தமாக அனுப்பினால், விரைவில் கெட்டு விடுகிறது. எனவே இளநீரில் வெளிப்பகுதியை, தோல் சீவும் இயந்திரம் மூலம் சிறிதாக்கி, நன்கு கழுவி, பாலிதீன் கவரில் ஒட்டி, சீதோஷ்ண சம நிலையுள்ள கன்டெய்னர்கள் மூலம் அனுப்புகின்றனர்.
சில நாடுகளில் இளநீரை விஸ்கி, பிராந்தியில் தண்ணீருக்கு பதில் கலந்து கூட குடிக்கின்றனர். இன்று தமிழ்நாடு, கேரளா, அந்தமான், ஆந்திரா, கர்நாடகாவில் 10 ரூ, 20 ரூ விலைக்கு நல்ல தரமான இளநீர் தேவையான அளவு கிடைக்கிறது. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை, இந்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், விவசாய பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அத்தாரிட்டி ஆகியோரும், த.நா.வேளாண்மை பல்கலைக்கழகம் ஆலோசனை, உதவி, மானியம் தருகின்றன. நபார்டு வங்கியும், ஏற்றுமதி வளர்ச்சி வங்கியும் கடன் தருகின்றன. கீழ்கண்ட வலைதளம் பாருங்கள். www.tn.gov.in, www.tnau.ac.in, www.cdb.gov.in, www.apeda.com, www.nabard.org, www.exinbank.nic.in, www.nhb.gov.in.
- எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்,
93807 55629
gnanam_nidco@yahoo.co.in
அதன் பின் கொச்சி சென்றிருந்தேன். பஸ் நிலையத்தில் "தென்னை வளர்ச்சி வாரியம்'' Coconut Development Board உடைய விற்பனை மையத்தில் வாங்கிக் குடித்தேன். மரத்தில் இருந்து வெட்டிக் குடித்ததை போல் மிக சுவையாக இருந்தது. விசாரணை செய்தேன். கேரளாவில் இருந்து ஏராளமான கோடி ரூபாய் விலையுள்ள இளநீர் ஏற்றுமதி ஆவதாக தெரிவித்தார். தாய்லாந்து நாட்டில் இருந்து ஏராளமான இளநீர் ஏற்றுமதி ஆவதை அறிந்தேன். இளநீர் குலைகளை மொத்தமாக அனுப்பினால், விரைவில் கெட்டு விடுகிறது. எனவே இளநீரில் வெளிப்பகுதியை, தோல் சீவும் இயந்திரம் மூலம் சிறிதாக்கி, நன்கு கழுவி, பாலிதீன் கவரில் ஒட்டி, சீதோஷ்ண சம நிலையுள்ள கன்டெய்னர்கள் மூலம் அனுப்புகின்றனர்.
சில நாடுகளில் இளநீரை விஸ்கி, பிராந்தியில் தண்ணீருக்கு பதில் கலந்து கூட குடிக்கின்றனர். இன்று தமிழ்நாடு, கேரளா, அந்தமான், ஆந்திரா, கர்நாடகாவில் 10 ரூ, 20 ரூ விலைக்கு நல்ல தரமான இளநீர் தேவையான அளவு கிடைக்கிறது. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை, இந்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், விவசாய பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அத்தாரிட்டி ஆகியோரும், த.நா.வேளாண்மை பல்கலைக்கழகம் ஆலோசனை, உதவி, மானியம் தருகின்றன. நபார்டு வங்கியும், ஏற்றுமதி வளர்ச்சி வங்கியும் கடன் தருகின்றன. கீழ்கண்ட வலைதளம் பாருங்கள். www.tn.gov.in, www.tnau.ac.in, www.cdb.gov.in, www.apeda.com, www.nabard.org, www.exinbank.nic.in, www.nhb.gov.in.
- எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்,
93807 55629
gnanam_nidco@yahoo.co.in