பசுமை நண்பன் மோகன்தாஸ்
2 ஆண்டுகளாக கடையில் காய் வாங்கியதில்லை!
பசுமை நண்பன் மோகன்தாஸ்: சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவன் நான். கிட்டத்
தட்ட இரண்டு ஆண்டு களாக, காய்கறி வாங்க, நாங்கள் கடைக்குப் போவதே கிடையாது.
தக்காளி, அவரைக் காய், உருளைக் கிழங்கு, வெண்டைக் காய், புடலங்காய், பூசணிக்காய், கத்தரிக்காய் என, எங்கள் மாடியிலேயே ஆர்கானிக் காய்கறிகளை வளர்த்து, சமைத்து சாப்பிடுகிறோம். பொதுவாக, மண்தொட்டியில் செடிகளை வைக்கும்போது, சீக்கிரம் உடைந்து விடுவதுடன், நீரால் எடையும் கூடும். அதற்கு மாறாக பிளாஸ்டிக் தொட்டிகளின் எடை குறைந்தாலும், மண் தொட்டிக்கு ஈடாக ஈரத்தை தக்க வைக்கும் தன்மை கிடையாது.இந்த சிக்கல்களுக்கு நண்பர்கள், இணையம் என, தீர்வு தேடியபோது தான், அற்புதமான அடுக்குத் தோட்டம் பற்றித் தெரிய வந்தது. உடனே அதை எங்கள் மொட்டை மாடியில் செயல்படுத்தி விட்டேன்.ஒரு குடும்பத்துக்கு, 4 - 6 அடுக்குகளைக் கொண்ட ஒரு அடுக்குத் தோட்டமே போதுமானது.ஒரு அடுக்குத் தோட்டத்தில், கிட்டத்தட்ட நமக்குத் தேவையான 20 காய்கறிகள், கீரை வகைகள், செடிகள்னு வளர்க்கலாம். 2க்கு 2 அளவு கொண்ட ஒரு அடுக்குத் தோட்டம் பரந்து விரிந்து வளர, 5க்கு 5 அளவு இடவசதி வேண்டும்.மேல் அடுக்கில் கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளையும், அதற்கடுத்த அடுக்குகளில் கீரை வகைகள், செடிகள், மூலிகைகள் என, நாம் விரும்பும் எதையும் வளர்க்கலாம்.பல அடுக்குகளைக் கொண்ட இந்த டவர் கார்டனின் அடியில், பல துளைகள் இடப்பட்ட ஒரு பேசின் இருக்கும். மற்ற முறைகளைப் போல அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை ஊற்றும் தண்ணீர், சொட்டு சொட்டாக பேசினில் உள்ள துளைகள் வழியாக வடிந்து, கீழே வைத்துள்ள பாத்திரத்தில் சேகரமாகும்.
பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட சத்து நிறைந்த அந்த தண்ணீரையே, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், தண்ணீரின் பயன்பாடு குறைவதுடன், எள்ளளவு சத்து கூட குறையாத காய்கறிகள் கிடைக்கும்.இவ்வாறு, எங்கள் தெருவில் உள்ள, 10 வீடுகளை மாடித் தோட்டமாக மாற்ற உத்வேகம் கொடுத்து, வீட்டுக்கொரு மரக்கன்றையும் நட்டு பாதுகாத்து வருகிறேன்.
தொடர்புக்கு: 93830 41899
No comments:
Post a Comment